U R VISITOR NUMBER

Thursday 24 January 2013


அரண்மனை வாயில்ல எதுக்காக மன்னர் ஏடிஎம் வைக்கச் சொல்றார்?
புகழந்து பாடற புலவர்களுக்குக் கையால காசு கொடுத்துக் கட்டுபடி ஆகலியாம்..
-சுப.தனபாலன்

மன்னர் இப்பல்லாம் அந்தப்புரத்துக்கு வர்றதையே குறைச்சுக்கிட்டாராமே..
ஆமா..அவருக்கு நெட்ல பார்க்கவே நேரம் போதலியாம்..
-சுப.தனபாலன்

மன்னா..ஆபத்து..
என்ன அமைச்சரே?
நீங்க கப்பப்பணத்துக்குக் கொடுத்த காசோலை பவுன்ஸ் ஆயிடுச்சாம்..
-சுப.தனபாலன்


“படத்  தயாரிப்பாளர்கள் காலத்தை எப்படிப் பிரிக்கிறார்கள்?“
“இடைச் சங்க காலம், தொடைச் சங்க காலம், உடைச் சங்க காலம்னுதான்..“
                                           -சுப.தனபாலன்

“ஊரே சிரிக்குது..“
“ஏன்?“
“நீங்க சிரிப்புத் துணுக்கு எழுத ஆரம்பிச்சதைக் கேள்விப்பட்டுத்தான்.“
                                           -சுப.தனபாலன்
”நில அபகரிப்பு வழக்கில உள்ள போன தலைவர் கடிதம் எழுதி இருக்கார்..”
”என்னன்னு?”
”நிலம்.நிலம் காண அவான்னுதான்..”  
                                                                     -  சுப. தனபாலன்



”தலைவர் தன்னோட மோசடியை இந்த அளவுக்கு விரிவுபடுத்தி இருப்பார்னு நினைச்சுக் கூடப் பார்க்கல..”
”என்னாச்சு?”
” நிலா அபகரிப்பு வழக்குப் போட்டிருக்காங்க”
                                                                -  சுப. தனபாலன்

No comments:

Post a Comment