U R VISITOR NUMBER

Sunday 30 June 2013

Left right away

He was a new comer.
His mother tongue is Telugu. Seeing my posting in Tamil, he was eager to publish in Telugu. So I assisted him  in typing Telugu scripts.
Even though I don't know Telugu Lipi, technical assistance was feasible.
He taught me a few Telugu words and continued vice versa (Tamil)
Our friendship flourished.
One fine morning, he raised a question:
I've got an offer from XYZ bank..Shall I leave?
I replied him promptly:
Have the Betrand Russel's Balance Sheet Approach.
He did it and
LEFT.

இனிய மனிதர்..4


வேறு ஒரு வேலையாகத் திருநரைய10ர் செல்ல வேண்டி இருந்தது. பக்கத்தில்தான் நாச்சியார்கோவில் என்பது வரை தெரியும். சந்திக்க வேண்டி இருந்தவரைச் சந்தித்து முடித்தபி;ன் சி.இரா வைப் போல் பார்ப்போம் என்று நினைத்திருந்தேன்.
யாரும் நம்ப மாட்டார்கள். நாங்கள் பேசிக் கொண்டிருந்த அதே இடத்திற்குத் தற்செயலாக வந்து நின்றார் சி.இரா. எதிர்பாராத சந்திப்பு. இன்ப அதிர்ச்சி. ஊரைச் சுற்றிக் காட்டினார். அந்த ஊரில் பித்தளைத் தொழில் நடைபெறும் விதத்தைச் சுட்டிக் காட்டினார். அதன் வளர்ச்சிக்குத் தம்மால் இயன்ற பணிகளை எப்படியெல்லாம் நிறைவேற்றினார் என்று விளக்கினார்.
ஊர்க்காரர்கள் அவருக்கு அளித்த வரவேற்பும் மரியாதையும் அவர் எப்படிப்பட்ட மனிதர் என்பதற்குக் கட்டியம் கூறின.  இந்த மனிதர்தான் இந்தோனேசியா சென்றிருக்கிறார். மலேசிய மண்ணைத் தொட்டிருக்கிறார். இந்தியக் கை வினைப் பொருட்களின் மதிப்பை எங்கெங்கோ பரப்பி இருக்கிறார்.
வட இந்தியாவில் ஜகாத்ரிää மொராதாபாத் ஆகிய இடங்களை எல்லாம் அடுத்த தெருவுக்குச் சென்று வருவது மாதிரிப் பயணித்திருக்கிறார். அந்த ஊர்க்காரர்களின் பிரதிநிதியாக அயல்நாடுகளுக்குச் சென்று வந்திருக்கிறார். அந்த அனுபவங்களைக் கேட்டால் இன்றைக்கெல்லாம் கேட்டுக் கொண்டே இருக்கலாம். அதற்கு முன்..

Saturday 29 June 2013

இனிய மனிதர்..3


"நான் உங்களுக்கு நிச்சயமாகப் பல நல்ல உத்திகளைக் கற்றுத் தர முடியும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இதுதான். ரூ3க்கான அஞ்சல்தலையுடன் எனக்குக் கடிதம் எழுதவேண்டும்". இப்படிச் சொல்கிறவர்களுக்கு எதிரில் நிற்பவர்கள் எல்லாருமே உடனே கணக்குப் புலிகள் ஆகிவிடுவார்கள்.
ஒரு ஆளுக்கு ரூ3 என்றால் ஒரு நாளைக்கு எத்தனை 3 ரூபாய்கள்..அடேயப்பா.. இவரல்லவா எளிதில் பணம் சம்பாதித்துவிடுவார் என்றுதான் கணக்குப் போடுவார்கள். நான் அப்படி நினைக்கவில்லை. ஏனெனில் எனக்குத் தெரியும். பதில் கடிதம் போடுவதற்கே அதற்கு மேல் செலவாகும் என்று. எனவே அந்த ரூ3 அஞ்சல் தலைகளுடன் என்னைப் பற்றிய குறிப்புகளையும் எழுதி அனுப்பி வைத்தேன்.
பதில் வந்தால் வரட்டும். வராவிட்டாலும் பரவாயில்லை என்று காத்திருந்தேன். பொறுப்பான பதில் வந்தது. அதன்மூலம் நான் கோடிகளில் புரண்டேனா என்பதைக் காட்டிலும் ஒரு நல்ல மனிதரின் நட்புக் கிடைக்க அது காரணமாக அமைந்தது என்பதுதான் முக்கியம். அவரை அடுத்துச் சந்திப்பது எப்போது என்று கனவு கூடக் காணவில்லை. ஆனால் அது நடந்தது..

How to face it?

Then there was a message from a comrade addressed to somebody else.
She had greeted him for his extraordinary poetic work.
I had not read it.
Anyhow, there is a poet among us.
I contacted him.Very soon We realized that we are on the same boat.
Friendship continued.
Even after retirement, he can remember me. Posts are exchanged.
We three have never met in person. But we are friends.
That is the true face of e-media.

Friday 28 June 2013

Tamil in English

Everyday, he would post one THIRUKKURAL 
.It would be presented in English.
His name showed that he is an ardent follower of Tamil.
Even then, he posted his messages in English.
Because, typing in Tamil is not so easy..that too without fonts.
Moreover, most of the readers don't know Tamil.
I tried to post messages in Tamil.
Then there was a storm in the tea cup.

இனிய மனிதர்..2

அவரே சொல்வார்..எங்கள் சமூகத்தில் கல்லுாரியை எட்டிப் பார்க்கிறவர்கள் குறைவு என்று.
இவர் பட்டம் பெற்றதில் இவரைக் காட்டிலும் இவரது உறவினர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி என்பார். அதனால் அவர்களே இவரை பி.காம் என்ற பட்டத்துடன்தான் அழைப்பார்கள்.
இவர் வருமானவரித்துறையில் முக்கியப் பதவியில்இருந்திருக்கிறார். அதை உதறிவிட்டுச் சொந்தத் தொழில் செய்ய இறங்கி இருக்கிறார். இவர் கொஞ்சம் விவரமானவர் என்கிற காரணத்திற்காக இவரைக் கூட்டாளி ஆக்கிக் கொண்டவர்கள் படு விவரமாக இருந்திருக்கிறார்கள்.
இழப்புடன் வெளியேற நேர்ந்திருக்கிறது. இருந்தாலும் இவரிடம் கை வசம் தொழில் இருந்தது. பித்தளைப் பாத்திர வியாபாரத்தில் இறங்கி இருக்கிறார். அதில் எண்ணற்ற உத்திகளை இவராகவே உருவாக்கி வெற்றிகரமாக இயக்கியும் இருக்கிறார். படிக்கிற காலத்திலேயே பல சாதனைகளுக்குச் சொந்தக்காரராக இருந்திருக்கிறார். அவை..

Thursday 27 June 2013

Will I shut up?

That comrade had mentioned an incident supposed to be happened in his college times.
It didn't so. It was a famous anecdote from the life of Mahathma. I gently reminded it.
All of a sudden, that comrade actually roared: Will you shut up your...?
Even then I politely replied.
I didn't know what happened after that.
After a few days, the very same person came with an apology.
Such incidents are numerous...
Who am I to forgive them..? after all they are my brothers and sisters/now sons and daughters/
grandsons and grand daughters.
So, I invite all of you to came upon me with a fearsome question of "Will you shut up..?"

இனிய மனிதர்..1

ஸ்வீட் இராமலிங்கம்
பெயரைக் கேட்டதும் இவர் ஏதோ இனிப்புக் கடைக்காரர் போலிருக்கிறது என்று எண்ணத் தோன்றும். அது உண்மையல்ல. இனிமையானவர் என்று எடுத்துக் கொள்வதாக இருந்தால் முற்றிலும் பொருந்தும். பெயர்க் காரணம்? அது அத்துணை முக்கியமல்ல. பிறகு பார்த்துக் கொள்ளலாம்.
நாங்கள் முதன்முதலி்ல் அவரைச் சந்தித்த போது அவர் ஸ்வீட் இராமலிங்கம் ஆக இருக்கவில்லை. வெறும் இராமலிங்கம்தான். அப்படிக் கூடச் சொல்ல  முடியாது. சி. இராமலிங்கம். அதுவும் இல்லை.
சி.இராமலிங்கம் பி.காம்.
அந்த பி.காமில் அவர் விடாப்பிடியாக இருந்திருக்கிறார். அதற்குக் காரணங்கள் பல. அந்தக் காலத்து பி.காம் இல்லையா..மேலும்..

Wednesday 26 June 2013

Saw saw the Shaw..ha ha

His messages were informative.Highly.
Everybody will be waiting eagerly to know the next message.
Somehow or other, he has become a specialist in his field.
But, it is not a success overnight.
Right from his childhood, he had developed the habit of reading, compiling and writing something useful.
Interesting?
Can you identity that gentleman?

சங்கமித்ரா..7

எனக்கு வருகிற ஆத்திரத்திற்கு அவனைச் செருப்பால் அடித்தால்தான் ஆறும் என்று பலரும் சொல்லக் கேட்கலாம். ஆனால் அப்படி அடிப்பவர்களையும் அடி வாங்கியவர்களையும் பார்ப்பது அரிது.
இந்த மனிதர் அடித்துக் காட்டி இருக்கிறார். கோபத்தை அடக்கத் தெரியாதவர் என்பீர்கள்.ஆயினும் இவரது கோபம் நியாயமானதே என்பதை ஒத்துக் கொள்வீர்கள். அவரைப் போன்ற துணிச்சல் நமக்கும் வர வேண்டும் என்று விரும்புவீர்கள்.
இவர் எப்போதும் பத்தோடு பதினொன்றாக இருக்க விரும்பியவர் அல்லர். தமது தனித்தன்மையை எந்தச் சூழ்நிலையிலும் விட்டுக் கொடுக்க எண்ணாதவர். இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் என்பார்கள். ஆனால் இவர் போல அவர் என்று சுட்டிக்காட்ட எவரும் இல்லை என்பதுதான் உண்மை.

Tuesday 25 June 2013

சங்கமித்ரா..6

எதற்கும் சளைக்காத உழைப்பு. எப்போதும் எழுதிக் குவிக்கும் குவிப்பு.
எத்தனை இதழ்கள், எத்தனை வகைகள்?
எவ்வளவு கோபம்? ஆற்றாமை?ஆத்திரம்?
உழைக்கிறார்கள் வெற்றி பெறுகிறார்கள் என்று உன்னதமானவர்களை அடையாளம் காட்டிய உங்களது படைப்பு இலக்கியங்களை எல்லாம் மிஞ்சும் இலக்கியம்.
எம்.எஸ்.உதயமூர்த்தி அவர்களின் எழுத்துக்கள் கருத்துரை என்றால் தங்களது செய்முறை. படிக்கப் படிக்கப் பயனுள்ளது.
ஒடுக்கப்படும் போதெல்லாம் வீறு கொண்டு எழ வைப்பது. பாராட்டுவதில் தாங்கள் வள்ளல். குட்டு வைப்பதில் சூரர்.
மனதில் பட்டதை வெளிப்படையாகச் சொல்வதால் பலரது பகைமையையும் சம்பாதித்துக் கொண்டவர்.
நட்பை உரிமையோடு நல்வழிப்படுத்தக் கண்டிக்கத் தயங்காத கனிவு கொண்டவர். உங்களது ஆத்திரத் தீ அணையாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்வது அத்துணை எளிதான செயலா என்ன?

Why VRS?

Attn: Mr Ramdoss
You have noted on your VRS from suggestions.
The real loss is not for you. It is for the community, especially IB people. I can guess the reasons.Attending Cash desk may be a tiresome task.
Basically, I think, you are a Writer (not only suggestions but literature too)
You might have heard about Writers' block. You are at this stage now. It is natural.
If you can remember, think of the suggestion for which you have won the coveted Rs.2k prize.(I insisted on submitting the same)
Try to overcome your block. It is temporary. Divert your attention to your real life stories.An assignment: If you don't mind: Why your branch is named like that/ why it is called as Krappatti?

Monday 24 June 2013

சங்கமித்ரா..5

வேறு வேறு களங்கள். வேறு வேறு தளங்கள்.
தனது தந்தையின் பெயரை வெளிப்படையாகச் சொல்வதற்கே அவர் சந்தித்த ஏளனங்கள்.இன்றும் கிராமப்புற இளைஞர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களுள் முதன்மையானது. அந்தப் பெயரைக் கொண்டே அவரை வாட்டி வதைத்த மேலதிகாரிகள்.
கல்வியில் நிகழ்த்திய சாதனைகள்.வென்றெடுத்த பதக்கங்கள். முதலிடங்கள். போட்டித் தேர்வுகளில் பெற்ற வெற்றிகள். வேலைகள். வித்தியாசமான அனுபவங்கள். எதிரிகள். நண்பர்கள்.இயல்புகள். திறமைகள்.
இத்தனையும் இணைந்த கலவை. வழிகாட்டியாகக் கொள்ள வகையான மனிதர். ஒரே நேரத்தில் பல்வகைப் பணிகளில் ஆர்வமும் ஈடுபாடும் காட்டக் கூடியவர்.
அஞ்சலட்டையில்தான் எப்போதும் பதில். அதற்கும் சில விதிமுறைகள். கண்டிப்பாய் அனுப்புநர் முகவரியை இடம் பெறச் செய்ய வேண்டும் என்கிற நெறி.கருமியோ என்று எவரும் நினைத்துவிடவும் வாய்ப்புக் கொடுக்க மாட்டார்.தமிழர்கள் நட்சத்திர விடுதிக் கலாச்சாரத்திலும் கற்றுக் கொள்ள வேண்டும் என்பார். அங்கேயும் கருத்தரங்குகளை நடத்துவார்.

Admire them..5

She would raise questions..
Especially on current events.
Similarly she would try to answer questions instantly..
She herself would blame her as a Munthirik kottai.
Once she had worked at Minnal..a place meaning Lightening.
So her friends would address her as "Vamma..Minnal" (Come on Lightening)
Every now and then she would change her profile picture.
You might have seen her in many photographs of Corporate functions.
Can't you guess?

Sunday 23 June 2013

சங்கமித்ரா..4

கருத்தரங்கில் பேசியவர்கள் எல்லாருமே தொழில்முறைப் பேச்சாளர்கள் அல்லர். ஆனால் அவர்கள் தங்களது அனுபவத்தில் இருந்து எடுத்துச் சொன்ன விசயங்கள் உண்மை..உண்மையைத் தவிர வேறில்லை.
ஒவ்வொருக்குள்ளும் உறங்கிக் கொண்டிருக்கும் ஆற்றலைத் தட்டி எழுப்புவதாக இருந்தது. யாரும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை விதைத்தது.யாராலும் சாதிக்க முடியும் என்பதை நம்ப முடிந்தது.
வெறும்வணிக நோக்குதான் எவரும் குறை சொல்ல முடியாது. ஏனெனில் அந்த மனிதருக்கு இருந்த நோக்கம் உயர்வானது. அவர் இருந்த இடமும் அத்துணை உயரத்தில் இருந்தது... அவர் ஏன்.. இப்படி என்கிற கேள்வியோடு நிகழ்ச்சி முடிந்த பின் நண்பர்களை நோக்கினேன்.
கொடுத்தகாசு செரிக்கும் என்று அவர்கள் நினைப்பது புரிந்தது. அடுத்து?

Admire them..4

"We have received a floppy containing salary details of one our clients. To-day, the particular staff is on leave. We have no idea of bulk posting..Will you help?"
That was the essence of the message.
I too have never encountered such a situation. Anyhow, I tried to explain the ways and means to get the task done. With or Without this reply they were able to complete the job.
Replying to queries of people in despair helps enrich (y)our knowledge. Friendship strengthens.What more you need?
A mutual help.. that too timely.
btb, guess that comrade.

Saturday 22 June 2013

சங்கமித்ரா ..3

எப்படியோ சில நண்பர்களிடம் எடுத்துச் சொன்னேன்.
சிலரால் கட்டணம் கட்ட முடியும். வேறு சிலருக்கு அது மட்டுமே இயலும். போய்வரும் செலவு கூடுதல் சுமையாக அமையும்.
பார்த்துக் கொள்ளலாம் என்று
ஒரு வழியாக நான்கைந்து பேர் புறப்பட்டுவிட்டோம்.
சென்னையின் இதயம்.. அண்ணா சாலை
தேவநேயப் பாவாணர் பொது நுாலக அரங்கு..
பெரிய கூட்டம் எதுவும் இல்லை.
ஓ..இவர்தான் அந்தப் பா.ராவா?
கண்டதும் கவனிக்க வைக்கும் களை.
முகத்திலும் கூட.ஆனால் அதுவே ஓர் அறிஞருக்குடைய அடையாளமாக வெளிப்பட்டது.
அன்பும் ஆளுமையும் போட்டிஇடும் ஓர் இனிய நட்பு பூப்பதை எல்லாராலும் உணர முடிந்தது.

Admire them..3

Every day, it has become a routine expectation.
There would be inspiring quotes from that lady flashed on the IBC screens.
The quotes would perfectly fit with the situations going on.
So, everybody would like to read, cherish and follow.
But, the style, language, emphasis would be of high calibre.
Everybody would get astonished.
But the lady frankly disclosed:
they were not her original work.
Nobody worried about that. They demanded more quotes..One day a SoS

Friday 21 June 2013

சங்கமித்ரா ..2

பா.ரா ஒரு கருத்தரங்கி்ற்கு ஏற்பாடு செய்திருந்தார்.
கட்டணம் கொடுத்துக் கருத்தரங்குகளில் கலந்து கொள்வது என்பதெல்லாம் வெளிநாடுகளில் மட்டுமே பிரபலமானதாக இருந்த காலம் அது. தமிழகத்தில் அவர் அதைப் புகுத்தினார். சென்னைப் பயணம் என்பது சாமான்யர்களுக்குச் சாத்தியப்படாத கால கட்டமும் கூட. இருந்தும் நாங்கள் அவரது கருத்தரங்கில் கலந்து கொள்ள அனுமதி கேட்டோம்.
முன்பதிவில் கறாராக இருந்தார். நாங்கள் எத் தனை பேர் கலந்து கொள்ள முடியும் என்பதை உறுதியாக முடிவு செய்ய இயலாத நிலை. தெரிவித்தோம். தமிழர்கள் தங்கள் முன்னேற்றத்தி்ற்காக முன்கூட்டியே திட்டமிடக் கூடாதா
என்று கேள்வி எழுப்பினார். செவிட்டில் அறைந்த மாதிரி இருந்தது.

Admire Them..2

Ramdoss is an alumnus of our college..the now infamous American College.
There is a general belief that American College students are of a rare genre.So is he.
My classmate might be his Lecturer as the Commerce students were taught even Physics.
He has worked at  Telecommunication Department also.
Many a time he has declined the offers for promotions.
His IBC profile had a quote from Samuel Johnson. I can't remember exactly but it meant;
"I don't know where knowledge is..but I know whom to contact"
So, we people who lack knowledge, know  that one person.. who happens to be Ramdoss

Thursday 20 June 2013

Admire them:


M.RamDoss
If you ask any doubt on day to day work, then replies will be immediately flashed. They may be in the form of a write-up, demo, model sheet etc. He is a familiar figure in the IBC. Comparatively he is very nearer to us. Moreover, he is from Madurai.Apart from banking he is capable of writing good articles. poems etc.

சங்கமித்ரா

இவர்களை எப்படித் தெரிந்து கொண்டேன்?
திரு பா.இராமமூர்த்தி
வளர்தொழில் இதழில் இவரது படைப்புகளை வாசிக்கத் தொடங்கினேன். இவரது தகுதிகளும் அனுபவங்களும் வியக்க வைப்பவையாக இருந்தன. சங்கமித்ரா என்பதும் இவரது இன்னொரு பெயர் என்பது தெரிய வந்தது. இவரை நேரில் காண இயல்பாகவே ஒரு வாய்ப்புக் கிடைத்தது. அதுவும் வளர்தொழில் மூலமாகத்தான்.

Wednesday 19 June 2013

மல்டி லெவல் மார்க்கெட்டிங்

இங்கேயும் எம்எல்எம்
ஒருவர் பெறும்
உதவியை
இருவருக்குத் திருப்பிச் செய்தால்
உலகம்
ஒரே நாளில்
உன்னதமாகிவிடும்

It really happened

A walk in customer: When will you close the cash counter?
Staff: @ 3:30
C: Why not? now it is 4:30 only

Tuesday 18 June 2013

If we play cricket

நாங்களும் கிரி்க்கெட்ஆடினா இப்படிததான் கலந்தாலோசிப்போம்..
ஆனால் சூதாடுவதற்கல்ல..

He was very much inclined to be our subordinate staff.
He sincerely wanted to complete his X std exams since he was a drop out.
Even though a few tutorial colleges were there, he insisted me to teach him. I obliged.
He passed the exams with flying colours.
But, he was not selected due to over qualification.
(Now a days, obtaining a degree is considered the right way to be elevated)
நன்றி
நான் நன்றி சொல்ல வேண்டியவர்களி்ன்
பட்டியலில்
நண்பர்களைக் காட்டிலும்
எதிரிகளே
நிறைய இருக்கிறார்கள்..
அவர்கள் மட்டும்
சீண்டி இருக்காவிட்டால்
நான் இருக்கும் இடமே
தெரியாமல் போயிருக்கும்

Monday 17 June 2013

எங்கே இடுகை இட வேண்டும் என்று கேட்கிறது.
அதில் குழுவின் பெயரை நிரப்ப வேண்டும்.
அனுப்பி வைக்கச் சிறி.....து நேரம் ஆகத்தான் செய்கிறது.
அட..
வந்துவிட்டதே!
இவ்வளவுதானா? இதைப் போய் என்னவோ ஏதோவென்று..
இன்றைக்குத்தான் தெரிந்தது
இங்கே இருந்து
கூகுள் பிளஸ்சுக்கும்
ஃபேஸ்புக்கிற்கும்
படைப்புகளை அனுப்பலாம் என்பது.
அப்படியானால் இதை ஆவணமாக வைத்துக் கொண்டு இங்கிருந்து அங்கே கொடுக்கலாம்.
ஆனால் குழுக்களுக்கு அளிப்பது எப்படி?
தணணீரிலிருந்து மின்சாரம் எடுக்கிறார்களாம்..
மின்சாரம் தண்ணீர் தருமா?

ப்ளோக் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமா?
கேளுங்கள் தரப்படும்

Saturday 8 June 2013

வேர் வேறு
வேராக இருப்பது வேறு

வேர்தான் வேறு மாதிரித் தெரிகிறது!