U R VISITOR NUMBER

Wednesday 28 August 2013

மதுரை கமலா ஏஜென்சி இன்று புதிய வலைப்பூ துவக்கி இருக்கிறார்கள்.

Saturday 27 July 2013

அவர்கள் பார்வையில் அதுதான் சரி

அதுஎன் தந்தையார் பணியாற்றிய இடம்
எனக்கு அதுதான் புண்ணிய பூமி
சொந்த ஊருக்கு அருகில் இருந்தும் ஒரு நடை எட்டிப் பார்க்க இயலாமல் இருந்த திருத்தலம்
வயிற்றுப் பாட்டிற்காக வெளியிலேயே சுற்றிக் கொண்டு இருந்துவிட்டேன்.
பற்பல ஆண்டுகளுக்குப் பின் அந்த ஊரைத் தேடிக் கொண்டு போனேன்
முன்பு இருந்த இடம் என்று ஊருக்குள் கை காட்டினார்கள். அங்கு இப்போது வெறும் மண்மேடுதான் இரு்க்கும் என்றும் சொன்னார்கள்.
புதிய இடத்தையே தரிசி்த்தேன்..
குழந்தைகளின் மகிழ்ச்சிக்காகச் சில தின்பண்டங்களை அளித்தோம்..
சற்றைக்கெல்லாம் ஊர் கூடிவிட்டது..
” டேய்..செக் பண்ண வந்திருக்காங்கடா.. இன்னிக்கு... தினம் இல்ல.. அதான் கொடி ஏத்தி இருக்காங்களான்னு பார்க்கறதுக்காக வந்தவங்க இவங்க” என்று சிறுவர்கள் கிசுகிசுத்துக் கொண்டதைக் கேட்க முடிந்தது.
நாங்கள், எங்கள் உடை, வாகனம் ஏற்படுத்திய தாக்கம் அது.
வெளியூரிலிருந்து யார் வந்தாலும் விவகாரத்திற்காகவே வருவார்கள் என்கிற கால காலத்து நம்பிக்கை.
நான் அங்கு சென்றிருந்தது
சனவரி 26 ஆம் நாள்..
ஆமாம்..
இந்தியக் குடியரசு நாள்

Thursday 25 July 2013

Cash handling

 In those days, there were no counting machines.
Only manual counting.
You would have to sort the notes also.
Something would be sticky.
You could not separate the damp pieces.
Some of the notes would have washing marks of turmeric. It is customary  to drop a few currencies in the Aarathi plates.Such notes could not be refused.
Then comes the stitching.
Bundling.
People would say," If you are beaten with a bundle, then the damage should be felt only on your head but no on the currencies".
But, no body had tested that in practical.

பறிமுதல் செய்வதா?

குமுதம்,பேசும்படம், பொம்மை
அம்புலிமாமா
முத்துகாமிக்ஸ்
வண்ண வண்ணமாய்ப் படங்கள்
பலது புரியும் சிலது நெருடும்
இவற்றை யார் எங்கே வாஙகுகிறார்கள் என்பதும் தெரியாது.
ஆனால்
சில பிரகஸ்பதிகளின் புத்தகப் பைக்குள் இவை பாதுகாப்பாக ஒளிக்கப்பட்டிருக்கும். கதைப் புத்தகங்கள் என்ற பொதுவான பெயரில் இத்தகைய தனியார் நுாலகங்கள்.
பெருமைக்காகவும் பொறாமையாலும்
” அவன் கதைப் புத்தகம் வைத்திருக்கிறான்” என்ற செய்தி காற்று வாக்கில் வந்துவிழும். இதற்கென்றே தனி உளவுப் பிரிவு வேலை செய்யும்.
அடுத்து அவை பறிமுதல் செய்யப்படும் -
சின்ன வயதில் அதுதான் வேலையே-
படிப்பதற்காகத்தான்!

Wednesday 24 July 2013

30 ஆண்டுகளுக்கு முன்னும் பின்னும்

அந்த நண்பன் எங்கள் கல்லுாரியிலிருந்து விலகி வேறொரு பல்கலைக் கழகத்திற்குப் படிக்கச் சென்றான்.
அவனுடன் படித்த ஒருவர் என்னுடன் வேலைக்குச் சேர்ந்தார்.
நண்பன் மூலமாகக் கிடைத்த நண்பர்.
சிறிது காலத்திற்குப் பின் நீண்ட பிரிவு.
சுமார் முப்பது ஆண்டுகள் கழிந்திருக்கும்.
பெயரையும் வேலை செய்யும் இடத்தையும் மட்டுமே நினைவில் வைத்துக் கொண்டு தேடிப் போனேன்.
சந்தித்தோம்.
மலரும் நினைவுகளில் மூழ்கினோம்.
இப்போதும் தொடர்பில்இல்லை.. ஏனெனில் நீண்ட இடைவெளிக்குப் பின்னான இன்னொரு சந்திப்பிற்காக..

வளம் பெற வழி

நீங்கள் யாருடன் பேசிக் கொண்டிருந்தாலும் பழகிக் கொண்டிருந்தாலும் அவர்கள் உங்களுக்கு எதையாவது தரத் தயாராகத்தான் இருக்கிறார்கள்.
நட்பை, காதலை, அறிவை, காழ்ப்புணர்வை, நோயை..
ஆனால் அவர்களிடமிருந்து பணப் பயனை மட்டுமே எதிர்பார்க்க நினைத்தால் ஏமாற்றம் மிஞ்சுவது இயற்கை.
பதிலாக
நட்பை, காதலை, அறிவை, அனுபவத்தை
வாங்கப் பாருங்களேன்
இருவருமே வளம் பெறுவீர்கள்.

Tuesday 23 July 2013

பறந்து வாருங்கள்..

அன்புள்ள..... .... அவர்களுக்கு,
உங்களை நான் கடுமையாகக் குற்றம் சாட்டுகிறேன்..
உங்களால் பறக்க முடியும் என்பது உங்களுக்கே நன்றாகத் தெரிந்தபிறகும்
இன்னும்
தத்தித் தவழ்ந்து கொண்டு இருப்பது
மாபெரும் குற்றம்.
ஆகவே பறந்து வாருங்கள்..
(.. .. என்ற இடத்தில் உங்கள் பெயரை நிறைவு செய்து கொள்ளவும்)