U R VISITOR NUMBER

Tuesday 26 February 2013

Numerology: A novel approach
Your  life cycle starts from the day you born.
It is customary to follow born number and fate number.
According to Paul's findings, your graph should be based on your birth date's overtones.
let it be a sine wave.
Impose favourable numbers with respective phases. Subtract the effects of Evil numbers. The resultant will be your life cycle.


Monday 25 February 2013

breakthrough in numerology:
if your born number is x, then don't blindfoldedly follow all the X and X+9 dates in each month.
new findings achieved.

Sunday 24 February 2013

convert decimal numbers to binary numbers
a simple XL will do

Friday 22 February 2013

you need not believe numerology
but one thing is sure:
you cannot change your birthday. so change everything possible according to your date of birth

Monday 18 February 2013

Planetary trnasition

Nfhs;fs; ,lk; ngau;tjhy;
vd; fhyk;
khWkhk;
tsk; ngWkhk;
mjw;Ff; fhR Nfl;fpwhu;fs;
tsk; ngw;w gpwF
ghu;f;fyhk;
vd;wpUf;fpNwd;
it is not luck
tptuk;
Nghjhjtu;fs;jhd;
ntw;wpf;Fj; Njit
yf; vd;ghu;fs;.
vjw;fhf Mq;fpyk;?
ntw;wpiag; gpbf;fj;
NjitahdJ
,yf;Fjhd;

Sunday 17 February 2013

Volunteers needed for a research project on GOLDEN RATIO. If you can contribute pl come forward
nghd;tpjp vd;Wk; nghd;tpfpjk; vd;Wk; nrhy;yg;gLk; fUj;J Fwpj;j Muha;r;rpia ePz;l fhykhf Nkw;nfhz;L tUfpNwd;. fUj;Jf;fis tuNtw;fpNwd;. Mu;tyu;fs; Njit.
What is better for SMEs : Cloud or Google Docs

rpW kw;Wk; FW epWtdq;fSf;F ,e;j ,uz;ilAk; tpl $Fs; mspf;Fk; [p nkapy; ,ytr ,ltrjpNa NghJkhdjhf ,Uf;Fk;. 10 [pgp msTf;Fs; ,e;j trjp ngupJk; if nfhLg;gjhf mikAk;

Would you like to watch your progress graphically?
ePq;fs; cq;fs; njhopy; ,yf;FfisAk; md;whl Kd;Ndw;wq;fisAk; tiugl tbtpy; fhzyhk;. NkYk; rpwg;ghf Kd;NdWtjw;Fg; gad;gLj;jyhk;. ,jw;fhd vf;nry; topKiwia mspf;ff; fhj;jpUf;fpNwhk;.

Thursday 14 February 2013

shell icon could not be created by the system hence i was unable to use nhm writer to blog in tamil. instead i tried to type with bamini unicode font. wow..it's wonderful

,J ghkpdp vOj;JUtpy; mbj;J xl;lg;gl;lJ. 
ed;whf ,Uf;fpwJ jhNd.
,jpy; ,d;ndhU vspa topAk; Gyg;gl;lJ. g;shfpy; ghkpdp vOj;JU fPopwq;F gl;baypy; fpilg;gjpy;iy. vdpDk; Ntu;by; mbj;J ,q;F nfhz;L te;J xl;baijj; njhlu;e;J NkYk; jl;lr;R nra;aj; njhlq;fpaNghJ ,t;thW te;jJ. vdNt vd;vr;vk; iul;lu; Ntiy nra;atpy;iy vd;whYk; ,e;j topiag; gpd;gw;wyhk;.
kpd;dQ;rYf;Fk; ,Nj topKiw nghUe;JfpwJ. ePq;fSk; gad;gLj;jpg; ghu;f;fyhk;.

Tuesday 12 February 2013

இணையப் பயன்பாடு எங்கோ போய்விட்டது என்கிறார்கள்
இருந்தாலும்
this page cannot be opened
என்பதுதான் பெரும்பாலும்
காணப்படுகிறது.

இந்தக்காலத்திலும் எதற்காகப் பாடப் புத்தகங்கள்,
இணையத்தில் ஓப்பன் புக் எக்ஸாம் மாதிரிக் கொண்டு வரலாம் இல்லையா?

வீட்டுக்குறிப்பு என்றாலே சமையலும் பராமரிப்பும்தானா,
பெண்மணிகளுக்குக் கணினிக் குறிப்புகள் தேவைப்படுவதே இல்லையா?

எண்ணி (Count)
எண்ணிச் (Think) செலவழிக்கிறேன்
இணைய நேரத்தை
-
எப்போது நிற்குமோ
இணைப்பும்
மின் இணைப்பும்

Monday 11 February 2013

how u r able 2 blog in Tamil?
use quillpad or nhm's writer. the choice of keyboards is available.so u can blog in any language.


Sunday 10 February 2013

காரைக்குடியிலிருந்து பட்டுக்கோட்டைக்குப் பயணச் சீட்டு வாங்கிக் கொண்டு அமர்ந்திருககிறேன். விரைவு வண்டி. 48 ரூபாய் கட்டணம்.
அறந்தாங்கி வருகிறது.
அவசரமாப் போக வேண்டி இருக்கறவங்க எல்லாம் அந்த வண்டிக்குப் போங்க.. நாங்க டயர் ஏத்திக்கிட்டுப் போகணும்.. முக்கா மணி நேரம் ஆகும் என்கிறார் நடத்துனர்.
வழக்கமாய் டீ , காபி சாப்பிடப் பத்து நிமிடம் நிறுத்துவதாகச் சொல்வார்கள்.
இது என்ன புதுவகை நிறுத்தம்? வேலை நிறுத்தம்?
என்னைப் போல் நெடுஞ்சீட்டு வாங்கியவர்களின் கதி? யாராவது தீர்வு சொல்லுங்கள் சுவாமி.

ஏழாயிரம் கட்டிப் பயணம் செய்யும் மகளை அனுப்பி வைக்க வந்த இடத்தில் பத்தடி தள்ளி உள்ளே அமர ரூ45 கட்டணமாம். அதுவும் சில மணித் துளிகளுக்கு. இந்த 45 ரூபாயைக் கறக்காவிட்டால் எந்த விமானத் தளம் குடி முழுகிப் போகும் என்பதுதான் புரியவில்லை.

மூவாயிரம் கிலோமீட்டர் பயணித்து முடித்த மகளிடமிருந்து
அலைபேசி
அப்பா நான் வீடு வந்துவிட்டேன்.
வழி அனுப்பி வைக்க வந்த அப்பா மட்டும்
இன்னும்
நீண்ட நெடிய பயணத்தில்
இத்தனைக்கும்
விரைவு வண்டிகளில்

Saturday 9 February 2013

பேஸ்புக் எங்களைப் போன்ற சிறு வணிக நிறுவனத்திற்கு எப்படிப் பயன்படு்ம்?
பேஸ்புக்கை வணிக நோக்கங்களுக்குப் பயன்படுத்தலாமா? யாரிடம் அனுமதி வாங்க வேண்டும், எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும்?
விரங்களைத் தெரிவிப்பீர்களா?
பேஸ்புக் என்பது 50 கோடிப் பேர்களுக்கும் மேல் சந்தித்து கலந்துரையாடிக் கருத்துக்களைப் பகிரிந்து கொள்ளும் ஒரு சமூக வலைத்தளம். இதில் உங்களது நிறுவனத்திற்கென்று ஒரு பக்கம் அல்லது சில பக்கங்களை உருவாக்கிக் கொள்ளலாம். கட்டணம் தேவையில்லை. தங்கள் நிறுவனத்தைப் பற்றிக் கேட்கப்படும் சில விவரங்களை நீங்கள் .இணையத்தில் அளிக்க வேண்டி இருக்கும்.
தேவை என்ன?
உங்களது தேவைகள் எனனென்ன என்பதை முதலில் தெளிவாக முடிவு செய்து கொள்ளுங்கள்.
வேலைக்கு ஆட்கள் தேவையா,
உங்களது வணிக, சேவைகளுக்கு வாடிக்கையாளர்கள் தேவையா?
உங்களது  நடவடிக்கைகள் நாலு பேருக்குத் தெரிய வேண்டுமா,
நீங்கள் அளிக்க இருக்கும் தகவல்களை யாரெல்லாம் பார்க்க வேண்டும்? யாரெல்லாம் பார்க்கக் கூடாது?
உங்களுக்கேற்ற தொழில் கூட்டாளிகளைத் தேடிப் பிடிக்க வேண்டுமா,
நிதி உதவி அளிக்க இருப்பவர்களை நாட

நாங்கள் சிறிய அளவில் வணிகம் செய்கிறோம். பேஸ்புக் மூலம் தொடர்புகளை அதிகரிக்க விரும்புகிறோம். இதற்கு அனுமதி பெற வேண்டுமா, கட்டணம் செலுத்த் வேண்டுமா, எப்படிச் செயல்படுவது,
பேஸ்புக் என்பது உலகெங்கும் 50 கோடிப் பேர்களுக்கு மேல் பங்கேற்கும் ஒரு சமூக வலைத்தளம். புரியவில்லையா?
இ.ணையத்தில் உங்களைப் பற்றிப் பிறருக்குச் சொல்லலாம். அவர்களது கருத்துக்களைக் கேட்கலாம். படங்கள் ? காட்சிகளை அளிக்கலாம். இதற்குக் கட்டணம் எதுவும் கிடையாது. அனுமதிகளைப் பெற வேண்டிய தேவையும் இல்லை. நீங்கள்தான் யாரை அனுமதிக்கலாம் யாரை அனுமதிக்கக் கூடாது என்பதை முடிவு செய்ய வேண்டும்.
கட்டணம் செலுத்தி உங்களுக்கு மட்டுமே தேவைப்படும் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதை அடுத்த நிலையாக மேற்கொள்ளலாம்.
இப்போது
உங்களுடைய குறிக்கோள் என்ன என்பதைத் தெளிவாக்கிக் கொள்ளுங்க்ள்.
உங்களுக்கு வேலைக்கு ஆட்கள் தேவையா,
வாடிக்கையாளர்களைப் பிடிகக் வேண்டுமா,
உங்கள் செவைகள் பற்றிச் சொல்ல வேண்டுமா?
விளம்பரம் செய்ய வேண்டுமா?
நீங்கள் அளிக்கும் தகவல்களை எல்லாரும் பார்க்கலாமா?
யாரெல்லாம் பார்க்கக் கூடாது? முடிவு செய்து கொள்ளுங்கள்.
நீங்கள் அளிக்கும் தகவல்களைப் படிப்பவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை நீங்கள் அறிந்து கொள்வதுதான் உங்களது முக்கியத் தேவையாக இருக்கும். ஆகவே கருத்துக்களைத் தெரிவிப்பதற்குப் பார்வையாளர்களை அனுமதிப்பதே நல்லது.
இல்லை யில்லை.. இது என் தொழில் இரகசியம்..குறிப்பிட்ட வட்டத்திற்குள்தான் இருக்க வேண்டும் என்கிறீர்களா? அதற்கும் ஏற்பாடு செய்து கொள்ளலாம்.
எதை வெளியிடலாம்?
உங்களது தயாரிப்புகள்
சேவைகள்
உங்களிடம் கிடைக்கும் வசதிகள்
புகைப்படங்கள்
காணொளிக் காட்சிகள் (வீடியோ)
நீங்கள் அளிக்கும் தகவல்களையும் படங்களையும் உலகெங்கும் பல பேர் பார்க்கிறார்கள். மேலும் அதிகமானவர்கள் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறிர்களா,
ஆம் எனில் நீங்கள் அளிக்கும் தகவல்கள் சுவையாக அமைய வேண்டும். அவற்றைப் பார்ப்பதால் தங்களுக்குப் பயன் கிடைக்கும் என்று நம்புகிறவர்கள் உங்களைத் தொ்டர்பு கொள்வார்கள்.
பல்சுவைப் பத்திரிகை ஒன்றை நடத்துவதைப் போல் எடுததுக் கொள்ளுங்கள்.
உங்கள் தகவல்களை இந்த இடத்தில் வந்து பாருங்கள் என்று உங்களுக்குத் தெரிந்தவர்களை அழைக்க வேண்டும்  வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கத் தேவையி்ல்லை. மின்னஞ்சல் மூலமே அழைக்கலாம். விருப்பம் உள்ளவர்கள் சேர்ந்து கொள்வார்கள்.
கவனிக்காமல் இருப்பவர்களையும் கவனிக்க வைப்பதில்தான் உங்கள் வெற்றியே அடங்கி இருக்கிறது.
இன்னொன்றையும் கவனியுங்கள்.
கட்டணம் செலுத்தியும் பேஸ்புக்கில் விளம்பரம் செய்யலாம். இப்போதைக்கு அது உங்களுக்குத் தேவைப்படாது. நல்ல வளர்ச்சியை எட்டிய பின் அதையும்  முயன்று பார்க்கலாம்.
நீங்கள் சில தகவல்களை அளித்து உங்கள் முகநுால் பக்கத்தைத் துவக்கலாம்.
உங்களது சேவைஃ பணி? வணிகம் எத்தகையது என்ற வகைப்பாட்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
(எ-டு) வணிகச் சேவைகள்
உள்ளுர் வணிகம்
இடம்
முழு முகவரி தொலைபேசி அஞ்சல் குறியீட்டு எண் முதலான விவரங்களை அளிக்க வேண்டும்.
விதிமுறைகளுக்குக் கட்டுப்படுத்துவதாகவும் ஒத்துக் கொள்ள வேண்டும்.
நீங்கள் தரும் விவரங்கள் சரியாக இருக்க வேண்டும்.
எந்தப் பெயரில் உங்கள் பக்கம் அழைக்கப்பட வேண்டும் என்பதையும் குறிப்பிட வேண்டும். ஒருவேளை அந்தப் பெயர் கிடைப்பதற்கு வாய்ப்பு இல்லை என்றால் இந்த மாதிரி வைத்துக் கொள்ளலாம் என்றும் ஆலோசனை வழங்குவார்கள்.
பொருத்தமான பெயரைத் தேர்வு செய்து கொள்ளுங்கள்.
உங்களது மின்னஞ்சல் முகவரி
கடவுச் சொல்
பிறந்த தேதி முதலிய விவங்களை நிரப்புங்கள்.
நீங்கள் மனிதரா அல்லது இயந்திரமா என்பதை உறுதி செய்வதற்காக கேப்சா என்ற குறியீட்டு முறை இருக்கும். வேறொன்றுமில்லை. நீங்கள் பார்க்கும் சொல் ஒன்றை அப்படியே அடிக்க வேண்டும்
விதிகளுக்கு ஒத்துக் கொள்கிறேன் என்று ஒப்புதல் அளிக்க வேண்டும்.
பிறகு?

பயணங்கள் ?
பட்டுக்கோட்டையிலிருந்து மதுரைக்குச்  சுமார் 160 கிலோமீட்டர். மாலை 5.15க்கு ஏறி அமர்ந்தால் மதுரை மாட்டுத்தாவணியை அடைய இரவு பத்தே முக்கால். அதாவது ஐந்தரை மணி நேரப் பயணம். கட்டணம் 95 ரூபாய். விரைவு வண்டியின் இலக்கணம் இதுதான்.
அதிகக் கட்டணம். குறைந்த வேகம். இடுக்கிப் பிடித்து அமர வேண்டிய இருக்கை. அறந்தாங்கியில் அரை மணி நேரம். காரைக்குடியில் அரைமணி நேரம் காத்திருப்பு.
பட்டுக்கோ்ட்டை - மதுரை ஒரே பயணச் சீட்டு வாங்கி இருந்த ஒரே ஒரு ஏமாளியும் நானே. காரைக்குடியில் ஒரு மூதாட்ழ என்னப்பா யாரையுமே காணோம். மதுரை போகுமா என்று கேட்டது உச்சக் கட்டக் கேலி.
அது தவிர வழியில் ஏதோ ஒரு விபத்து. முன் பின் போக வழியில்லை.
ஆத்திரம் கண்ணை மறைக்கும். ஆனாலும் இருபதடி தொலைவில் ஏதோ ஒருமனித உயிர் நொடியில் பறி போயிருந்தது.  காவலர்கள் வேகமாக வந்து வேகத் தடைகளை உருவாக்கிக் கொண்டிருந்தார்கள்.இனி வண்டி எப்போது கிளம்புமோ தெரியாது.
வேறு வழியின்றிக் காத்திருக்கையில் சில நிமிடங்களில் இரத்தச் சேற்றின் ஊடாக மெல்ல நகர்ந்து வேகம் எடுத்தது. குடித்து விடடு ஓட்டி இருக்கக் கூடும் என்று சிலர் முணுமுணுத்தார்கள்.
தலை திரும்பிக் கிடந்த மஞ்சள் நிற இரும்புக் குதிரை ஒன்றை அரைக்கால் சட்டை அணிந்த ஒருவன் எட்டி உதைத்தான். ஒருவேளை இதுதானே ஓர் உயிரைப் பறித்தது என்கிற கடுப்பாக இருக்கலாம்.
வண்டி குடை சாய்ந்தது. துாக்கி நிறுத்த நாலு பேர் தேவைப்பட்டார்கள்.
அதெல்லாம் போகட்டும்..
எதற்காக அத்தனை பேர் ஏதோ தேர்இழுக்க வடம் பிடிப்பவர்களைப் போல் காத்துக் கொண்டு  சாலை நெடுக வேடிக்கை பார்த்தார்களோ புரியவில்லை. இரத்த மையில் பரபரப்புச் செய்திகள் சாலைக் கறுப்புக் காகிதத்தில். மக்கள் எதைத்தான் எதிர்பார்க்கிறார்கள்?


நண்பர் பாரி கேட்காமலே சொன்னவை

நான் எதை எல்லாம் விரும்பினேனோ அவை எல்லாவற்றையுமே என்னால்அடைய முடிந்திருக்கிறது. இதற்கு என்னிடம் ஏதோ மாய மந்திர சக்தி இருப்பதாக யாரும் எடுத்துக் கொள்ளத் தேவையில்லை.
ஒரு வகையில் இது பேராசை என்று கூடச்  சொல்லலாம் ஆனால் இது ஒவ்வொருவருக்கும் அவசியம் தேவையான பேராசை என்றுதான் பரிந்துரைப்பேன்.
விரும்பியது எல்லாவற்றையும் பெறுவதற்கு என்ன வழி?
நாம்  யாரைப் பின்பற்ற நினைக்கிறோம் என்பதை முதலில் முடிவு செய்து கொள்ள வேண்டும். எனக்குப் பிடித்த தலைவர் காந்தியடிகள்தான். அவர் முதன் முதலாக அகிம்சை என்ற ஒரு கருத்தைக் கொண்டு ஆதிக்கம் மிகுந்த பிரிட்டிஷ் பேரரசையே வெற்றி கொள்ள முடியும் என்று காட்டியவர். அவருடைய உள்ளத்தில் அப்படியொரு கரு்தது உருவாகி இருந்ததை  அவர் யாரிடமாவது சொல்லி இருந்தால் இதெல்லாம் வேலைக்கு ஆகாது என்றுதான் இகழ்ந்திருப்பார்கள்.
எனக்குள்ளும் சில சிந்தனைகள் தோன்றும். அவற்றை அப்படியே நடைமுறைப்படுத்த நல்ல புத்தகங்களைப் படிக்க முடிந்தது. தன்னம்பிக்கை ஊட்டும் எபுத்தாளர்கள் வரிசையில் அப்துல் றகீம் பற்றிச் சொல்வார்கள். எனக்கு எம்.எஸ் .உதய மூர்த்தி அவர்களை மிகவும் பிடிக்கும். அப்புறம் பா. இரா.
இவர்களது எழுத்துக்கள் எல்லாம் நமக்கு முன்பு நேரில் யாரோ நின்று கொண்டு கையைப் பிடித்து அழைத்துச் செலவ்து போன்ற ஓர் ஒட்டுணர்வை வளர்க்கும்.
நாம் எதை நினைத்தாலும் அதை அடைய முடியும் என்கிற நம்பிக்கையை ஊட்டும். இன்று இருப்பதைக் காட்டிலும் இன்னும் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்பது என் விருப்பம். அம்பானி, வால்மார்ட் அளவுக்கு வளர் வேண்டும் என்று இலட்சியம் வைத்திருக்கிறேன்.
கெட்பவர்கள் கேலி செய்வார்கள். ஆனால் நினைத்தது நடக்கும் என்பதில் மட்டும் அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது. யாரிடம் எந்த நல்ல யோசனை கிடைத்தாலு்ம் அதைச் செயல்படுத்துகிறேன்.
எளியதோர் எடுத்துக்காட்டைச் சொல்லலாம். என்னிடம் வேலைக்கு வருகிறவர்கள் ஆர்வத்தேர்டு வந்து விடுமுறை எடுக்காமல் வேலை செய்ய வேண்டுமானால் அவர்களுக்கு ஊக்கத் தொகை அளிக்கும் திட்டத்தை அறிமுகம் செய்தேன். அவர்களுக்கும் பாதிப்பு இல்லாமலும் எனக்கும் குறித்த நேரத்தில் வேலை ஆகும் விதத்திலும் பல ஊக்குவிப்பு நடைமுறைகளை அறிமுகம் செய்திருக்கிறேன்.
வைரமுத்துவை ஒரு முறை யாரோ கேட்டார்கள். இளையராஜாவு்ட்ன் இணையாவிட்டால் உங்களது திறமை வெளிப்பட்டிருக்காதே என்று. அதற்கு அவர் சொன்னார், நான் என் திறமை மேல் நம்பிக்கை வைத்திருக்கிறேன். என்னால் வேறு யாருக்கும் பாதிப்பு இருக்காது. அதே நேரத்தில் என் வளர்ச்சியை ஊக்குவிக்க என் திறமை முபுவதையும் பயன்படுத்துவேன் என்று.
இப்பதெ்தான் யாரோ எங்கோ எப்போதோ எதற்காகவோ சொன்ன சில சொற்கள் நமக்கு ஏதோ ஒரு விதத்தில் பயன்படும். நான் இதை என் அனுபவத்தில் கண்டிருக்கிறேன்.
என் தாயார் பலமுறை கூறுவார்கள். நமது நிறுவனத்திற்கு நல்ல  விளம்பரமாக அமைய நாம் ஒவ்வோர் ஆண்டும் காலண்டர் அளித்தால் என்ன என்று கேட்பார்கள்.
நோக்கம் என்னவோ விளம்பரப்படுத்துவதுதான். ஆனால் அதன் பலன் எந்த அளவுக்கு உணரப்படும் என்பதில் நான் கவனமாக இருந்தேன். பத்து ரூபாய் விலையில் ஒரு கைப் பை அச்சிட்டு அளித்தேன். அதுவும் எப்படி?
புத்தாண்டு அன்பளிப்பு உங்களுக்காகக் காத்திருக்கிறது. நேரில் வந்து வாங்கிப் போகவும் என்று எனது வாடிக்கையாளர்களுக்குக் கடிதம் எழுதினேன். அது ஒரு தொடர்பை உருவாக்கியது, வளர்த்தது. ஊக்குவி்த்தது. காலண்டர் கொடுப்பதைக் காட்டிலும் இதில் உள்ள பயன்களை என் தாயாரிடம் விளக்கினேன்.
எனது முன்னேற்றத்திற்கு நான் ஒருவன் மட்டுமே காரணம் என்று சொல்ல மாட்டேன். செங்கிஸகான் எப்படி மாபெரும் பேரரசை உருவுர்க்க முடிந்தது என்று கேட்டால் அதற்கு அவனது சகோதரர்கள் ஒற்றுமையாக இருந்து உதவினார்கள் என்பார்கள்.
அதுதான என் விசயத்திலும் நடக்கிறது. ஒன்றுபட்ட ஒத்துழைப்பைப் பெறுகிறேன். குடும்பத்தில் எல்லாரும் ஒரே நோக்கத்திற்காக உழைக்கிறோம். நான் சுயு சரிதம் எழுதும் அளவக்குப் பெரிதாகச் சாதித்துவிடவில்லை. ஆனால் என் கதை பொருளியல் சார்ந்ததாகத்தான் இருக்கும்.
ஒரு மனிதன் வாழும்போதும் அதற்குப் பிறகும் ஆறடி இடம் போதும். அதற்கு மேல் அவன் தேடுவது எல்லாமே சமூக நலனுக்கானதாகத்தான் இருக்கும். நானும் அந்த இலக்கை நோக்கித்தான் பயணிக்கிறேன்.
அதை அடைவேன் என்று உறுதியாக நம்புகிறேன்.
காரணம்
எனக்குரிய வழிகாட்டிகளைத் தேர்ந்தெடுக்கிறேன்.
ஆலோசனைகளை வரவேற்கிறேன்.
செயல்படுத்துகிறேன். எதற்கும் ஒரு பதிவு அவசியம் என்பதை உணர்கிறேன். இதோ இந்தப் பதிவை வெளியிட்டதைப் போல..
நீங்களும் வெற்றி பெற வேண்டுமா? உங்கள் நலனில் அக்கறை கொண்டவர்களின் வார்த்தைகளைக் கேளுங்கள். உங்களுக்குப் பக்க பலமாக இருப்பவர்களைப் பெருக்கிக் கொள்ளுங்கள்.
நீங்கள் எதை நினைத்தாலும் நடக்கும்.

Monday 4 February 2013

which talent of yours is not yet recognized?
உங்களது எந்தத்  திறமை இதுவரை அங்கீகரிக்கப்படாமல் இருக்கிறது? உங்களது ஆதங்கம் என்ன? நீங்கள் எதைச் சாதிக்க விரும்புகிறீர்கள்?
யாரை வழிகாட்டியாகக் கொள்ள நினைக்கிறீர்கள்?

மக்கள் தொகைக் கணக்கெடுப்பிற்கு வரும்போது அலுவலகத்தில் இருக்கிறேன்.
வாக்காளர் அட்டைக்கும் அதே கதை.
ஆதாருக்கும் அப்படியே
எங்கள் பணி நாளி்ன் 24 மணிநேரமும்
எங்களால் வாக்களிக்க இயல்வதில்லை
வேட்பாளர்கள் கண்டுகொள்வதில்லை
வரி மட்டும் கொடுக்கும் இடத்திலேயே பிடிக்கும் அரசு
எங்களுக்குரிய எரிவாயு, குடிமைப் பொருள் போன்றவற்றைக் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை..
உரிமைப் பொருட்களையாவது தரலாம் இல்லையா?

யாருக்கு வேண்டும் இந்த ஞாயிறு விடுமுறை?
ஒருபோதும் கடைவீதிக்குச் சென்று பொருட்களை வாங்க முடிந்ததில்லை.
விடுமுறை நாளை விருப்பப்படி மாற்றி அமைத்தால் இன்னும் வியாபாரம் பெருகும். வணிகர்களும் அரசும் சிந்தித்தால் தேவலாம்.
அரசுக்கு...
மரங்கள் உள்ள வீடு மற்றும் மனைகளுக்குப் பத்திரப் பதிவில் சலுகை காட்டுவது பசுமையை வளர்க்கும்

சமூக வலைத்தளப் பதிவுகளின் அடிப்படையில் அடையாள, வாக்குரிமை,குடியுரிமை, கடவுச் சீட்டுக்களை அளித்தால் என்ன?


Sunday 3 February 2013

அரசுக்கு யோசனை
ஓர்இருக்கை வரிசைக்கு ஒரு சன்னல் என்று பேருந்துகளில் வடிவமைத்தால் பல தகராறுகள், நோய்த் தாக்குதல்களைத் தடுக்கலாமே.
குளிர் காலத்தில் சன்னலைத் திறந்து வைத்துக் கொள்வது, எச்சில் துப்புவது என்று சக பயணிகள் தொல்லைப்படுத்தப்படுவதைத் தவி்ர்க்கலாம்.

தொழில்நுட்பம் எவ்வளவோமுன்னேறி இருக்கிறது. அடுத்த நிறுத்தம் எது என்று அறிவிக்க வழி செய்தால் என்ன?

விரைவுப் பேருந்துகள் குறைந்த எண்ணிக்கையிலான பயணிகளுடன் போகின்றன. அடுத்துவரும் தனியார் பேருந்துகள் சாதாரணக் கட்டணத்தில் வாரிச் சுருட்டிக் கொண்டு செல்கின்றன. இழப்பு எப்படி வருகிறது என்பது தெரிகிறதோ?

பேருந்துகளில் ஒலிஒளிபரப்புத் தொல்லைகளைத் தடை செய்வது ஒலியால் ஏற்படும் மாசுவைக் குறைக்கும். இதில் தனியார் அலைபேசிகளையும் சேர்த்துத் தடைவிதிக்கலாம்.

பயணிகளிடம் இனிமையாகப் பழகும் நடத்துநர்களுக்குச் சிறப்புப் பதக்கம் அளித்து அவர்கள் பணிநேரத்தில் அதனைப் பெருமையுடன்அணிந்து கொள்ள வழி செய்யலாம்.

Friday 1 February 2013


வியாழன், 31 ஜனவரி 2013
மன்னா..இளவரசரை எந்த குருகுலத்தில் சேர்ப்பது,?
கண்டிப்பாகக் கம்ப்யூட்டர் கற்றுக் கொடுக்கும் இடத்தில்தான் சேர்க்க வேண்டும் அமைச்சரே..

தடபுடலான வரவேற்பு விழா ஏற்பாடுகளெல்லாம் நடக்கின்றனவே.. என்ன விசேஷம்?
மன்னர் புறமுதுகிட்டு ஓடிவருவது இது ஆயிரமாவது முறையாம்.. அதுதான்..

மன்னா நமது மதில்சுவர்களைப் பலப்படுத்தும் வேலைகள் எதிரி நாட்டானுக்குத் தெரிந்துவிட்டது..
எப்படி தளபதி?
அவன் ஜிபிஎஸ் எல்லாம் வைத்திருக்கிறான் மன்னா..

போர்களைப் பொருத்தவரை தன் கையே தனக்குதவி என்பதில் மன்னருக்கு உடன்பாடு இல்லை..
ஏன்?
தன் காலே தனக்குதவி என்பார்..

மன்னா... தாங்கள் அண்டை நாடுகளுடன் சமாதானத்தையே பெரிதும் விரும்புவது ஏன்?
யாரால ஓட முடியுது தளபதி? அதனாலதான்...

மன்னா..இளவரசர் ஓட்டப் பந்தயத்தில் முதலிடத்தில் வந்திருக்கிறார்.
பின்னே..அவன் யாரோட வாரிசு?

மன்னா தங்கள் வீரத்தைப் புகழ்ந்து பாடி இருக்கிறேன்.
தலைப்பு என்ன புலவரே?
புறமுதுகாற்றுப்படை..

மன்னா ... நாட்டில் போர்க்களங்களே இல்லாமல் போய்விடும் போலிருக்கிறது..
ஏன் தளபதி..
எல்லா இடங்களையும் மனை போட்டுவிடுகிறார்கள்...

ஒரு புள்ளிவிவரம் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது..
என்ன அமைச்சரே..
நமது படைவீரர்களைக் காட்டிலும் அந்தப்புரப் பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது..

மன்னர் போர்க்களத்தில கூட சீரியல் பார்க்கறார்..
என்ன சீரியல்?
மான் ஓட.. மயில் ஓடத்தான்..
என்ன புலவரே இது.? 5656432879?
என் பாடலுக்கான பரிசுத் தொகையை இந்த எண்ணிற்கு ஆர்டிஜிஎஸ் செய்துவிடுங்கள் மன்னா..

தலைவர் எதுக்குத் தொடைகளுக்கு அதிகப்பயிற்சி எடுத்துக்கறார்..?
யாரும் அவரைத் தொடை நடுங்கின்னு சொல்லிடக் கூடாதாம்..

தலைவருக்குப் பட்டம் கொடுத்தது தப்பாப் போச்சு..
ஏன்?
பட்டம் மட்டும் கொடுத்தாப் போதுமா..மாஞ்சா நு ல்  யார் தர்றதுங்கறார்..

ஒரு தவறு நடந்துவிட்டது மன்னா..
என்ன தவறு?
வாளை உறையில் போடுங்கள் என்று தாங்கள் சொன்னதை நமது வீர ர்கள் கடையில் போடுங்கள் என்று சொன்னதாக எண்ணிப் பழைய இரும்புக் கடையில் போட்டுவிட்டார்கள் மன்னா...
நண்பர் விஜய்அவர்களே
தங்கள் வடமொழிப் பெயரை இனி விசை என்று அழைக்கலாமா?
விசையுடன் அந்த எழுதி வைத்து அனுப்பாத படைப்புகளை இங்கே வெளியிடலாமே..

நண்பர் ஆனந்த் அவர்களே..
இன்று எதைப் படித்தீர்கள், எதைப் படைத்தீ்ர்கள்?

நண்பர் நபீக் அவர்களே
வரவு >  செலவு = மகிழ்ச்சி
வரவு <செலவு =துன்பம்
வரவு =செலவு =தேக்கம்
வரவு>> செலவு = வளர்ச்சி