U R VISITOR NUMBER

Friday 21 June 2013

சங்கமித்ரா ..2

பா.ரா ஒரு கருத்தரங்கி்ற்கு ஏற்பாடு செய்திருந்தார்.
கட்டணம் கொடுத்துக் கருத்தரங்குகளில் கலந்து கொள்வது என்பதெல்லாம் வெளிநாடுகளில் மட்டுமே பிரபலமானதாக இருந்த காலம் அது. தமிழகத்தில் அவர் அதைப் புகுத்தினார். சென்னைப் பயணம் என்பது சாமான்யர்களுக்குச் சாத்தியப்படாத கால கட்டமும் கூட. இருந்தும் நாங்கள் அவரது கருத்தரங்கில் கலந்து கொள்ள அனுமதி கேட்டோம்.
முன்பதிவில் கறாராக இருந்தார். நாங்கள் எத் தனை பேர் கலந்து கொள்ள முடியும் என்பதை உறுதியாக முடிவு செய்ய இயலாத நிலை. தெரிவித்தோம். தமிழர்கள் தங்கள் முன்னேற்றத்தி்ற்காக முன்கூட்டியே திட்டமிடக் கூடாதா
என்று கேள்வி எழுப்பினார். செவிட்டில் அறைந்த மாதிரி இருந்தது.

1 comment:

  1. 1940 கட்டணம் பெற்று கூட்டம் வாரியார் மற்றும் அண்ணா அவர்களால் நடத்த பெற்றது. இருவருக்குமே ஹவுஸ் புல்தான்.

    ReplyDelete