U R VISITOR NUMBER

Tuesday 2 July 2013

இனிய மனிதர்..6

அவருடைய உறவினர் ஒருவருக்கு வெளிமாநிலத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட சரக்கு ஒன்று வந்து சேரவில்லை. போக்குவரத்து நிறுவனம் என்னென்னவோ சாக்குப் போக்குகளைச் சொல்லித் தட்டிக்கழித்துக் கொண்டிருந்தது.
சரக்கைப் பெற வேண்டியவர் சலித்துப் போய்விட்டார். இனி அதைப் பெறவே வழி இல்லை என்று தளர்ந்துவிட்டார். இது குறித்துப் பேச்சு வாக்கில் சி.இராவிடம் தெரிவித்திருக்கிறார்.
சி.இரா எல்லா விவரங்களையும் முறைப்படி திரட்டி, எழுதிய கடிதத்திற்குப் பலன் கிடைத்தது. சரக்குக்குரிய தொகையை நண்பருக்குப் பெற்றுத் தருவதில்  சளைக்காது பாடுபட்டார் சி.இரா.
இப்படி எத்தனையோ கை நழுவிப் போன சொத்துக்களை மீட்டுக் கொடுத்ததில் அவருக்கு ரொம்பவும் நல்ல பெயர்.
அதைவிட நல்ல பெயர் அவருக்கு வேறொரு வகையிலும் கிடைத்து வந்தது. அது..

No comments:

Post a Comment